கிரீன்லாந்தில் கனடாவின் புதிய நகர்வு! ட்ரம்பின் முயற்சிக்கு விழுந்த முட்டுக்கட்டை
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை தொடங்க உள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
இந்த முடிவு, கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துகளுக்கு எதிரான ஒரு முக்கிய அரசியல் சைகையாக பார்க்கப்படுகிறது.
இந்த தூதரகம், கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகரத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான திட்டமிடல் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் முடிவு
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், “டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் நீண்ட காலமாக நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம். ஒருவரின் அனுபவங்களை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம்” என்று கூறியுள்ளார்.

Image Credit: Al Jazeera
நூக் நகர மேயர் அவாராக் ஒல்சன், இந்த நடவடிக்கையை வரவேற்று பேசுகையில், “கனடாவின் இந்த முடிவு எங்களுக்கு பெரிய ஆதரவாக உள்ளது. ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின. ஆனால் கனடா போன்ற நாடுகள் எங்களுடன் உறுதியாக நிற்பது நம்பிக்கையை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்பு
முன்னதாக, கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று ட்ரம்ப் பலமுறை கூறியிருந்தார். இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் பல NATO நாடுகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

Image Credit: Brookings Institution
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, அமெரிக்கர்களில் 58 சதவீதம் பேர் ட்ரம்பின் இந்த யோசனைக்கு எதிராக உள்ளனர்.
அதே நேரத்தில், கிரீன்லாந்து மக்களில் 85 சதவீதம் பேர் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |