கனேடிய, பிரான்ஸ் தூதுவர்கள் ரணிலுடன் தனித்தனி சந்திப்பு
Ranil Wickremesinghe
France
Canada
By Vanan
இலங்கையில் தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் (David McKinnon) மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லவே(ர்)து (Eric Lavertu) ஆகியோர் இன்று (03) அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் அலுவலகத்தில் தனித்தனியாக சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது தமது பதவிக் காலம் முடிவடைந்துள்ளமை தொடர்பில் அவர்கள் அதிபருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிபர், கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் ஆகியோருடன் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
டேவிட் மெக்கினொன் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் இலங்கைக்கான கனேடிய தூதுவராகவும், எரிக் லவே(ர்)து 2018 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.
இலங்கைக்கான கனேடிய தூதுவர் - அதிபர் சந்திப்பு
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் - அதிபர் சந்திப்பு
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி