சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான கார் கண்டுபிடிப்பு : விசாரணையில் வெளியான தகவல்
பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கார் நேற்று (09) எம்பிலிப்பிட்டி காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை
இது தொடர்பாக பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணை செய்த போது, ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வந்து காரை இங்கு விட்டுவிட்டு, சம்பத் மனம்பேரியிடம் கொடுக்குமாறு கூறிச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமையை நீக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
