ஆப்கானிஸ்தானில் மாணவர்களை இலக்கு வைத்து கார்குண்டுத் தாக்குதல்! புழுதிகளுக்கு நடுவே சிதறிக்கிடந்த சடலங்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாடசாலை ஒன்றிற்கு அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஆப்கானிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது எனவும் இதில் கொல்லப்பட்டவர்கள் பலர் மாணவிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்குண்டு தாக்குதலே இடம்பெற்றது என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சம்பவம் இடம்பெற்றுள்ளதுர் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
புழுதி மற்றும் புகைமண்டலத்திற்கு நடுவில் பல உடல்களை பார்த்துள்ளதாக ஒருவர் குறிப்பட்டுள்ளார்.
தாயொருவர் தனது பிள்ளைகளை பெயர் சொல்லி அழைத்து தேடுவதை பார்த்தேன் பின்னர் அவர் தனது மகளின் இரத்தம் தோய்ந்த பேர்ஸை கண்டார் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார் என தெரிவித்துள்ளார்.