இலங்கையின் முக்கிய அரச வங்கி மீது வழக்கு தாக்கல்
நாட்டின் அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கி, தீர்வு உத்தரவுகளை மீறியதற்காக செலுத்த வேண்டிய 4.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதற்காக, தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில் திணைக்களத்தினால் நேற்று (22.07.2025) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அரச வங்கி
தொழில் திணைக்களத்தின் தெற்கு கொழும்பு மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தின் உதவி தொழில் ஆணையரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தீர்வு உத்தரவுகளை மீறியதற்காக செலுத்த வேண்டிய 44 இலட்சத்து நாற்பதாயிரம் (4,44,00,00) தொகையை செலுத்தத் தவறியதற்காக மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு தொழில் திணைக்களம் இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு கொழும்பு கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன் விசாரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
