கடும் நிபந்தனைகளுடன் நிறைவேறியது கசினோ வர்த்தக ஒழுங்குபடுத்தல் சட்டம்!
சிறிலங்கா நாடாளுமன்றில் கசினோ வர்த்தக ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று வெளியிட்டுள்ளார்.
பொது நிதி தொடர்பான குழு (COPF) 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ வர்த்தக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உள்ள சரத்துக்களுக்கு அமையவே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நலன்களுக்காக அங்கீகாரம்

இன்றைய தினம், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் கொள்கை வகுப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நாட்டில் கசினோக்களை ஒழுங்குபடுத்தும் வகையில், கசினோ ஒழுங்குப்படுத்தல் முகவர் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் அரசாங்கத்தின் நலன்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய COPF தலைவர், இலங்கையில் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமங்களை வழங்குவதற்காக சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
விடுக்கப்பட்ட கடும் ஆட்சேபனை

இருப்பினும் காசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகளை அங்கீகரிக்க COPF முன்பு மறுத்துவிட்டது. கசினோக்களுக்கு உரிமம் வழங்குவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் முதன்முறையாக தொடர்புடைய மனு கொண்டுவரப்பட்டது.
எனினும் கசினோ ஒழுங்குமுறை ஆணையம் இல்லாதது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த குழு, ஒழுங்குமுறை அமைப்பு இல்லாமல் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்படக் கூடாது என்று தெரிவித்ததுடன், இதற்கு கடும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்