K-8 விமான விபத்துக்கு காரணம் இதுதான்: வெளியானது அறிவிப்பு
அண்மையில் இலங்கை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானிகள் விட்ட தவறே காரணம் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
எண். 05 போர் விமானப் படைக்கு சொந்தமான விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், கடந்த வெள்ளிக்கிழமை காலை குருநாகலின் வாரியபொல பகுதியில் வழக்கமான பயிற்சிப் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.
விசாரணை அறிக்கை
அதன்போது, அதில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி, குருநாகலின் பதேனியாவில் உள்ள மினுவாங்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட் உதவியுடன் தரையிறங்கியிருந்தனர்.
இதன்படி, குறித்த விபத்து தொடர்பான காரணிகளை விசாரிப்பதற்காக மானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க சிறப்பு குழுவொன்றையும் நியமித்திருந்தார்.
இந்த நிலையில், தொழில்நுட்பக் குழுவிடமிருந்து விசாரணை அறிக்கையின் நகலைப் பெற்றதாக கூறிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிக்கையின்படி, விமானம் மற்றும் அதன் இயந்திரங்கள் நல்ல நிலையில் இருந்தாகவும் விபத்து விமானிகளின் பிழையால் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விமானிகள் பயிற்சி
அத்தோடு, வீதியில் பயணிக்கும் வாகனங்கள் போலல்லாமல், காலாவதியான விமானங்களை பறக்க அனுமதிக்க முடியாது என்றும் விமானத்தின் விமானிகள் இன்னும் பயிற்சியில் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர்களின் தரப்பில் ஒரு தவறு நடந்துள்ளதாகவும் இந்த சம்பவத்தில் விமானிகள் உயிர் பிழைத்ததில் நாங்கள் நிம்மதியடைந்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் கூறியுள்ளார்.
இதேவேளை, பயிற்சியின் போது இதுபோன்ற விபத்துக்கள் பொதுவானவை என்றும் உலகளவில் இவை நிகழ்கின்றதாகவும் அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 13 மணி நேரம் முன்
