4 ஆண்டுகளில் உச்சம் தொட்ட வாழ்க்கைச் செலவு..! எவ்வளவு தெரியுமா
இலங்கையில் (Sri lanka) தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு 4 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளதாக மத்திய வங்கியின் உதவி ஆளுநர் சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளதாக சந்திரநாத் அமரசேகர கூறியுள்ளார்.
குறித்த விடயத்தை இலங்கை மத்திய வங்கியில் (Central Bank of Sri Lanka) நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் குறைவதால் மக்கள் தற்போது பயனடைந்து வந்தாலும், 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது.
தனிப்பட்ட வருமானத்தைப் பார்த்தாலும், அதிகரித்த விலை நிலைகள் மற்றும் அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, 2021 ஆண்டுடன் 2024 ஆம் ஆண்டை ஒப்பிட்டால், வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது."
பணவீக்கம் குறைவதால் பொதுமக்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். ஆனால் 2021 உடன் ஒப்பிடும்போது, வாழ்க்கைச் செலவு பொதுமக்கள் உணரக்கூடிய அளவில் இருப்பதைக் காண்கிறோம்.
சம்பள உயர்வு
அரசு ஊழியர்களாக இருந்தாலும், தனியார் ஊழியர்களாக இருந்தாலும், அல்லது வணிகங்களின் வருமானமாக இருந்தாலும், அந்த வருமானத்தை அதிகரிக்க அதேபோன்று பொருளாதார வளர்ச்சியும் இருக்க வேண்டும், "எதிர்காலத்தில் அந்த வகையான பொருளாதாரம் இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
பொதுமக்களுக்கு இழந்த உண்மையான வருமானம் படிப்படியாக மீட்டெடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்." "சில நேரங்களில், குறிப்பாக அரச சேவையில், அவ்வப்போது சம்பள உயர்வுகளைக் காண்கிறோம்.
ஆனால் அவை உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட சம்பள உயர்வுகள் அல்ல. எனவே, பொருளாதார வல்லுநர்களாகிய நாம் பார்ப்பது சம்பளம் அதிகரிக்கும் போது, அவை உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என மத்திய வங்கியின் உதவி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
