சிசிரிவி இயங்கியபோதும் தரவுகள் சேமிக்கப்படவில்லை! கபிலவின் மரணத்தில் தொடரும் சர்ச்சை

Law and Society Trust Sri Lanka Kapila Chandrasena Airbus Bribery Scam
By Dharu May 19, 2026 07:38 AM GMT
Report

கபில சந்திரசேன அவர்களின் மரணம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் வசித்த வீடு, அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீடு ஆகிய இரு இடங்களிலும் நிறுவப்பட்டிருந்த சிசிரிவி அமைப்புகள் இயங்கிக்கொண்டிருந்தபோதிலும், அவற்றில் எந்தவித தரவுகளும் சேமிக்கப்படவில்லை என கொழும்பு குற்றப்பிரிவு இன்று (19) கோட்டை நீதிபதி பாசன் அமரசேன முன்னிலையில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய இரு வீடுகளிலும் பயன்படுத்தப்பட்ட இரண்டு DVR கருவிகள் இன்று நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அவற்றை மேலதிக தொழில்நுட்ப ஆய்வுக்காக அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்ப நீதிமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

QR முறைமை எரிபொருள் விநியோகம் - சற்றுமுன் அரசின் அறிவிப்பு

QR முறைமை எரிபொருள் விநியோகம் - சற்றுமுன் அரசின் அறிவிப்பு

சிசிரிவி அமைப்பு

மேலும், சிசிரிவி அமைப்புகளில் தரவுகள் ஏன் சேமிக்கப்படவில்லை என்பதை விளக்குவதற்காக, அந்த அமைப்புகளை நிறுவிய பொறியாளர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

சிசிரிவி இயங்கியபோதும் தரவுகள் சேமிக்கப்படவில்லை! கபிலவின் மரணத்தில் தொடரும் சர்ச்சை | Cctv Video On Kapila S Death

இதேவேளை, அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்கான நுழைவாயில்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தரைத்தள வாகன நிறுத்துமிடத்தின் வழியாக மேலும் இரண்டு நுழைவு பாதைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக குற்றப்பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

எனினும், 2026 மே 05 முதல் மே 07 வரை அந்த வழிகள் ஊடாக யாரும் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

கபில சந்திரசேனாவின் மரணத்திற்கு முன்னர் இடம்பெற்ற தொலைபேசி தொடர்புகளின் பதிவுகளை சேகரிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், வழங்கப்பட்ட கால அவகாசம் போதாமையால் மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.

இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்யவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். விசாரணையின் போது, கபில சந்திரசேனாவுக்குப் பிணை பெறுவதற்காக வழக்கறிஞரைச் சந்திக்கச் சென்ற பிணையாளர்கள் இந்த வழக்கில் சாட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளனரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இலங்கை - இந்தியா இடையில் பாலம் - மாற்றப்போகும் மெகா திட்டம்

இலங்கை - இந்தியா இடையில் பாலம் - மாற்றப்போகும் மெகா திட்டம்

நீதிமன்ற அனுமதி

அதற்கு பதிலளித்த கொழும்பு குற்றப்பிரிவு, குறித்த நபர்கள் வேறொரு வழக்கில் கொழும்பு பிரதான நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால், அவர்களிடமிருந்து உடனடியாக வாக்குமூலம் பெற இயலவில்லை என தெரிவித்தது.

சிசிரிவி இயங்கியபோதும் தரவுகள் சேமிக்கப்படவில்லை! கபிலவின் மரணத்தில் தொடரும் சர்ச்சை | Cctv Video On Kapila S Death

ஆனால், காவலில் உள்ள சாட்சிகளிடமிருந்து நீதிமன்ற அனுமதியுடன் வாக்குமூலம் பெறுவதற்கான அதிகாரம் புலனாய்வாளர்களுக்கு இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகள் தொடர்பாக மனு தாக்கல் செய்ய கொழும்பு குற்றப்பிரிவு ஒப்புக்கொண்டது.

இதனிடையே, கபில சந்திரசேனாவின் பிரேதப் பரிசோதனை தொடர்பான சான்றுகள் குறித்த மேலதிக விசாரணை இன்று (19) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது சரமாரியான வாள் வெட்டு!

யாழில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது சரமாரியான வாள் வெட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026