மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பிணையில் விடுதலை !
சிறிலங்கா மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது கைது செய்யப்பட்ட சுபுன் எஸ் பத்திரகே இன்று நீதிமன்ற விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இதன் போது, 25 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது நடவடிக்கை
மண்ணெண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கும் வருடாந்த சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை வெளியிடுவதற்காக அதிகார சபையின் தலைவர் இலஞ்சம் கோரியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 11 ஆம் திகதி சுபுன் எஸ் பத்திரகே மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மூவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, சுபுன் எஸ் பத்திரகேவின் வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியல்
எவ்வாறாயினும், அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை உள்ளடக்கிய ரணிலின் வரவு செலவு திட்டம் : பவித்ரா வன்னியாரச்சி சுட்டிக்காட்டு
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்