இஸ்ரேல் - லெபனான் போர்நிறுத்தம் வெற்றியளிப்பதில் சந்தேகம் : ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர்
இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே நீடிக்கப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம், மோதல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துமா என்பதில் சந்தேகம் இருப்பதாக ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் டேனி டானன் தெரிவித்துள்ளார்.
லெபனான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஹிஸ்புல்லா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் இஸ்ரேல் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
லெபனான் ராணுவம்
இந்தப் புதிய ஒப்பந்தம் நூறு சதவீதம் வெற்றிகரமாக அமையும் என்று கூற முடியாது என்றும் லெபனான் ராணுவம் இந்த போர்நிறுத்தத்தை முறையாக நடைமுறைப்படுத்தி வலுப்படுத்தும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிற்கான இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதுவர்கள் வெள்ளை மாளிகையில் சந்தித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 10 நாள் போர்நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், ஐ.நா தூதுவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |