மத்திய கிழக்கு போர் முடிவுக்கு..! ஜூன் -19 இல் உலகத்திற்கு விடுதலை: வெளியான அறிவிப்பு
அமெரிக்காவும் ஈரானும் நான்கு மாதங்களாக நீடித்து வரும் தங்களது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
″அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு ஜூன் 19 வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி
அமெரிக்காவுடனான சமாதான உடன்படிக்கை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடப்படும் என சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளார்.

இது தமது இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்துரைத்த டொனால்ட் ட்ரம்ப், இந்த மாபெரும் ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என அறிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் மற்றும் மத்தியஸ்த நாடான பாகிஸ்தானும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டதும் நீக்கப்படும் என்று கூறுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |