ஈரானின் கண்ணிவெடிகளில் சிக்கிய பாரிய எண்ணெய் தாங்கி கப்பல்! மறுத்தது அமெரிக்கா
ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அப்பகுதியில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை என்று CENTCOM தனது X பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.
IRGC - இன் முயற்சி
“ஹோர்முஸ் நீரிணையில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை. பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் பிராந்திய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்துவதற்காக IRGC மேற்கொண்டுள்ள மற்றொரு முயற்சியே இது" என்று CENTCOM பதிவிட்டுள்ளது.
🚫 CLAIM: Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) claims that a supertanker passing through the southern route of the Strait of Hormuz struck two mines and was brought to a complete stop. This is FALSE.
— U.S. Central Command (@CENTCOM) August 31, 2026
✅ FACT: No ships have hit mines in the Strait of Hormuz. This is… pic.twitter.com/spkaogBx81
விதிமுறைகளை மீறிச் சென்ற எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது ஹோர்முஸ் நீரிணையில் முழுமையாக இயக்கமற்று நிறுத்தப்பட்டதாக IRGC திங்களன்று உரிமை கோரியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |