மத்திய வங்கியின் ஆளுநரை பதவியிலிருந்து அகற்ற ரணில் முயற்சிக்கிறாரா...! அலரிமாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் எதுவித விரோதங்களும் இல்லை என்று அலரிமாளிகை அலுவலகம் அறிவித்துள்ளது.
முரண்பாடு
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில்முரண்பாடுகளை கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாக அவரை விலக்கிவிட்டு தினேஷ் வீரக்கொடியை புதிய ஆளுநராக நியமிப்பதில் ரணில் முயற்சி செய்வதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் குறித்த செய்திகள் பொய்யானவை என்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. அத்துடன் நந்தலால் வீரசிங்கவுடன் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது உத்தியோகபூர்வ ரீதியிலோ பிரதமருக்கு எதுவித மனத்தாபமும் இல்லை என்றும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
இதேவேளை, மத்திய வங்கி ஆளுநர் பதவி தொடர்பில் தனது பெயர் தொடர்புபடுத்தப்படுவது குறித்து தினேஷ் வீரக்கொடியும் மறுப்புச் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.