நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சாமர சம்பத் எம்.பி
Sri Lanka Parliament
Jagath Wickramaratne
MP Chamara Sampath Dassanayake
By Dhilak
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, அவர் சபாநாயகரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு சபையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
சபாநாயகரின் உத்தரவுகளை மதிக்காமல் சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வந்ததாலேயே சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில் உள்ள வழக்கு
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்று குறித்து இங்கு பேசுவதைத் தவிர்க்குமாறு சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்கவுக்கு அறிவுறுத்திய நிலையில் அதனை மீறியதால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 36 நிமிடங்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி