தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தயக்கம் காட்டும் ரணில்! சாணக்கியன் சீற்றம்

Tamils Colombo Dr Wijeyadasa Rajapakshe Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam
By Shadhu Shanker Jan 26, 2024 01:05 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

விடுதலைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்வதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தயக்கம் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் (26) திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “இவ் திடீர் சந்திப்புக்கான காரணம் சுமார் பத்து நாட்களுக்கு முன்னராக பிரதீபன் என்பவரை வெளியில் இருந்து வந்த சிறைச்சாலை  காவல்துறை அதிகாரிகள் என்று கூறப்படுபவர்கள் தாக்கியிருந்தார்கள்.

கனடா போலவே மர்மமான படுகொலைகள்: இந்தியா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய எல்லை நாடு

கனடா போலவே மர்மமான படுகொலைகள்: இந்தியா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய எல்லை நாடு

ஓர் இனத்தின் விடுதலை

அவரது நலனை விசாரிக்கும் நோக்கில் சென்றிருந்தேன்.முக்கியமாக வெளியில் இருந்து வந்து அவ் தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் இருந்தவர்கள். நீதி மற்றும் சிறைச்சாலைகளுக்கான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்பவருக்கும் அறிய தந்திருந்தேன்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தயக்கம் காட்டும் ரணில்! சாணக்கியன் சீற்றம் | Chanakyan Met Prison Colombo Ranil Terrisom Tamil

கைதியை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது.

ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அரசியல் கைதிகள் கற்பளித்தோ, கொள்ளை அடித்தோ அல்லது போதைப்பொருள் கடத்தியோ சிறைக்கு வந்தவர்கள் அல்ல.

சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தது பாடகி பவதாரணியின் உடல் (புதிய இணைப்பு)

சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தது பாடகி பவதாரணியின் உடல் (புதிய இணைப்பு)

ரணிலின் தயக்கம்

ஆனால் இவற்றை செய்தவர்கள் வெளியில் சில அரசியல் தலைவர்களாகவும் குறிப்பாக ஒட்டுக்குழுக்களை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் கூட உள்ளார்கள் நாம் அவர்களையும் இவர்களையும் ஒப்பிட முடியாது இவர்களின் பாதுகாப்பு அரசின் பொறுப்பாகும்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தயக்கம் காட்டும் ரணில்! சாணக்கியன் சீற்றம் | Chanakyan Met Prison Colombo Ranil Terrisom Tamil

இவ் சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் மிகவும் கவனமான முறையில் தங்களை நடாத்துவதாகவும் வெளியில் இருந்து வந்தவர்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள்.

இவ் சம்பவம் தொடர்பான விசாரணையை இவ் சிறைச்சாலை பொறுப்பதிகாரி கூறியிருந்தார். இங்கு எட்டு கைதிகள் மொத்தமாக உள்ளார்கள் ஆனால் இவர்களில் நால்வரை பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செயப்படகூடிய சூழல் உள்ளது ஆனால் அதிபர் ரணில் பல சாட்டுக்கள் சொல்லிக் கொண்டு வருகின்றார்.

அதிபரை ஆதரிப்பவர்கள் அவரது துதி பாடுபவர்கள் இவர்களுக்கான விடுதலைக்கு வலியுறுத்த வேண்டும்.

எமக்கான தீர்வு                                                                

பாரிய குற்றம் செய்த கைதிகளுக்கே பிணை மற்றும் விடுதலை கிடைக்கும் போது இவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. அதில் இரு சிறைக் கைதிகள் 28 வருடங்களாக சிறையில் உள்ளார். இவர்களுக்கு இவ் வழக்கு முடியும் வரை பிணையில் விட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தயக்கம் காட்டும் ரணில்! சாணக்கியன் சீற்றம் | Chanakyan Met Prison Colombo Ranil Terrisom Tamil

இவர்களை 28 வருடமாக இவர்களை துன்பப்படுத்தி அதில் இன்பம் அனுபவிப்பவர்களை எவ்வாறு கூறுவது. எமக்கான தீர்வினைத்தான் தருகின்றார்கள் இல்லை இவர்களின் விடுதலையையாவது உறுத்திப்படுத்துங்கள்.

இவர்களை வைத்து பலர் அரசியல் செய்கின்றார்கள் தனவந்தர்களாக உள்ளார்கள் அவர்கள் ஒன்றிணைத்து இவர்களது விடுதலைக்கு பாடுபடவேண்டும். எனது குரல் மற்றும் எனது சேவைகள் என்றும் ஒடுக்கப்படும் எம் மக்களுக்கான விடுதலையாக இருக்கும்” என குறிப்பிட்டார்.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024