சந்திரிக்காவின் புன்னகையில் மறைந்துள்ள கொடிய மிருகம்
முள்ளிவாய்க்கால் தினத்தன்று முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தனது இல்லத்தில் விளக்கேற்றி துக்கம் அனுஷ்டித்த விடயமானது சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட அந்த தமிழின அழிப்பை தமிழ் மக்கள் நினைவு கூர்கின்ற மே - 18ஆம் திகதியில், சந்திரிக்காவும் தனது வீட்டில் விளக்கேற்றி துக்கம் அனுஷ்டித்ததை ஏராளமான தமிழ் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
சிங்கள பௌத்த இனவாத அரசின் முன்னாள் தலைவரான சந்திரிக்கா அம்மையார் ஏற்றிய விளக்கின் ஒளியில் ஒரு தொகுதி தமிழ் மக்கள் மகிழ்ந்துகொண்டிருக்க, அந்த ஒளியின் பின்னால் தெரிகின்ற கரிய இருளையும், அந்தக் கரிய இருளில் ஒழிந்திருக்கின்ற பலவித உண்மைகளையும் தேட வேண்டியது ஊடகமாக எமது கடமையாகவும் இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் தினத்தன்று சந்திரிக்கா ஏற்றிய ஒளி விளக்கின் பின்னால் தெரிகின்ற அந்தக் கரிய இருளைத் தேடுகின்ற ஒரு பயணம் தான் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,