பொருளாதார நெருக்கடியில் நாடு - ரணில் வெளியிட்ட அறிவிப்பு
பொருளாதாரம் மற்றும் அரசியல் முறைமைகளில் முழு அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் வெளிநாடுகளுடன் இணைந்து செயற்பட்டால் தற்போதைய பிரச்சினைகளுக்கு இரண்டு வருடங்களுக்குள் தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவரை பதவி விலகுமாறு கோரிய ஆர்ப்பாட்டங்கள் தற்போது, அரசியல் தலைவர்களுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. தனிப்பட்ட முறையில் 20 ஆம் திருத்தத்திற்கு நான் எதிரானவன். எனினும், அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரமுறையை இல்லாதொழிப்பதா இல்லையா என்பதற்கு முன்னதாக அரசியல் ரீதியான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களை எவ்வாறு உள்வாங்குவது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது $25 மில்லியனுக்கும் குறைவான கையிருப்பு உள்ளது. அரசாங்கத்தின் வரி குறைப்பு காரணமாக நாடு சுமார் 800 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக .விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
