செம்மணி மனிதப் புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு!
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று (19) இடம்பெறவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் புதிதாக 10 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அகழ்ந்தெடுக்கப்பட்ட 573 என்புக்கூடுகள்
அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

அதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 ஆவது நாள் அகழ்வுப் பணிகளின் போது, 582 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |