செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம்: சர்வதேசத்துக்கு பறந்த கோரிக்கை

Jaffna Sri Lanka Law and Order chemmani mass graves jaffna
By Raghav Jun 29, 2025 12:50 PM GMT
Report

செம்மணி சித்துப்பாத்தில் கண்டறியப்படுள்ள மனிதப்புதைகுழி அகழ்வு சர்வேதேச கண்காணிப்பின் கீழ் சர்வதேச நியமங்களை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமாக, யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பாக எமது தீவிர கவனத்தையும், நிலைப்பாட்டையும் வெளியிடுகிறோம்.

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை

சர்வதேச நீதிப்பொறிமுறை

ஏற்கனவே தமிழர் தாயக பரப்பிலும் சிறிலங்காவிலும் 22 க்கும் மேற்பட்ட மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி, மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுகள் நிறைவுபெற்று மிக அண்மைய காலமாக தொடர்சியாக வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்றதே தவிர இந்த மனிதப்புதைகுழி தொடர்பான உண்மை இன்னும் உரியவகையில் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவில்லை.

செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம்: சர்வதேசத்துக்கு பறந்த கோரிக்கை | Chemmani Mass Graves Investigation

எனவே தான் நாங்கள் உள்நாட்டு நீதிபொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தவர்களாக தொடர்சியாக இவ்வாறாக கண்டுபிடிக்கப்பட்டு அகழப்படும் மனிதப்புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பையும், சர்வதேச நீதிப்பொறிமுறையையும் வலியுறுத்தி வருகின்றோம்.

தற்போதுவரை யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தில் மீட்கப்பட்ட அல்லது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் எண்ணிக்கை 14-ஐத் தாண்டியுள்ளது இதில் சிறு குழந்தைகளின் உடல எச்சங்களும் அடங்குவதாக அறிகின்றோம். 

மிகவும் கொடூரமான முறையில் ஒன்றன்மீது ஒன்றாக பலர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக இந்த புதைகுழி அகழ்வு வெளிப்படுத்துகின்றது.

ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படும்போது, அந்த இடம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப "மனிதப் புதைகுழி" என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். 

செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம்: சர்வதேசத்துக்கு பறந்த கோரிக்கை | Chemmani Mass Graves Investigation

எனவே, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான அகழ்விடத்தினை உடனடியாக ஒரு "மனிதப் புதைகுழியாக" பிரகடனம் செய்யுமாறும், அதன் அடிப்படையில் அகழ்வுப் பணிகளை மேற்படி மயான வளாகம் முழுவதிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விரிவுபடுத்துமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செம்மணி முழுவதும் போர் இடம்பெற்ற கடந்த காலங்களில் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக கிரிசாந்தி குமாரசாமி என்ற பாடசாலை சிறுமியின் கொலை தொடர்பான நீதிமன்றங்களில் இடம்பெற்ற வழக்குகளில் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணைக்குழுக்களுக்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, இந்த அகழ்வு நடவடிக்கை ஒரு தனிப்பட்ட சம்பவமாக அல்லாமல், பெரும் அளவிலான அட்டூழியங்கள் இடம்பெற்ற தரவுகளை வெளிக்கொணரும் முக்கியமான வழியாக காணப்பட வேண்டும். செம்மணியின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு வெவ்வேறு மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். ஆகவே,

1) செம்மணி சித்துப்பாத்தில் இடம்பெறும் அகழ்வு நடவடிக்கையை மனிதப் புதைகுழி விசாரணை என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கோருகின்றோம்.

2)அகழ்வுப் பணிகளை சர்வதேச நிபுணர்கள் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையுடன், சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.

3) மனிதப்புதைகுழி தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட்டு, வெளிப்படைதன்மையோடு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம்.

4)மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கையை ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுதந்திரமாக மட்டுப்படுத்தல்கள் இன்றி அறிக்கையிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

5) எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகைதருவார் என எதிர்பார்க்கப்படுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வடக்குக்கு பயணம் செய்து செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட்டு நீதியை நிலைநாட்டுவதற்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் மனிதப்புதைகுழிகள் தொடர்பாக விசாரணைகள் மூடி மறைப்புக்கள் இன்றி வெளிப்படைத்தன்மையோடு சர்வதேச சமூகத்தின் பங்கேற்போடு இடம்பெறும்போதுதான் வெளிப்படும் என நாங்கள் வலுவாக நம்புகின்றோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா ஆணையாளரின் செம்மணி விஜயம்... தமிழர்களுக்கு பச்சைக் கொடி : சிறீதரன் சுட்டிக்காட்டு

ஐ.நா ஆணையாளரின் செம்மணி விஜயம்... தமிழர்களுக்கு பச்சைக் கொடி : சிறீதரன் சுட்டிக்காட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

இறுப்பிட்டி, திருவையாறு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025