மறுஅறிவித்தல் வரை மூடப்படும் சிலாபம் வைத்தியசாலை!
Sri Lanka
Weather
Floods In Sri Lanka
Rain
By Kanooshiya
நாட்டில் காணப்பட்ட அசாதாரண வானிலை காரணமாக தற்போது நீரில் மூழ்கியுள்ள சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த வைத்தியசாலையின் பல வார்டுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் பல வைத்தியசாலை உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவிப்பு
சிலாபம் வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் நோயாளிகளில், பல குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வரை நோயாளிகள் சிகிச்சைக்காகவோ அல்லது சேர்க்கைக்காகவோ சிலாபம் பொது வைத்தியசாலைக்கு வருகைத் தர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம்
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்