ஆட்டுக்கு குழை வெட்டச்சென்ற சிறுமி பரிதாப மரணம்
death
Jaffna
Child
By Vanan
யாழ் - நெல்லியடியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கரணவாய், அண்ணா சிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காக கிணற்றுக்கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டிய போது அச்சிறுமி, கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.