சிறுவர்கள் பலருக்கு கொரோனா - கொழும்பு மருத்துவமனையில் அனுமதி
corona
colombo
children
By Sumithiran
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 சிறுவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சிறுவர்கள் எவருக்கும் கடுமையான பாதிப்புகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதிய கொரோனா அலை மூலம் சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்படுவதாகஅவர் தெரிவித்தார்.
மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, ஐ.டி.எச் வைத்தியசாலை கடுமையான இட நெரிசலில் உள்ளதாகவும் எனினும் நிலைமையை சிறப்பாக கையாள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்