அதிக எண்ணிக்கையான அணுகுண்டுகளை உருவாக்கும் நாடாக உருவெடுக்கும் சீனா
உலக நடுகள் தமது பாதுகாப்புக்காகவும் தங்கள் பலத்தினை அதிகரிப்பதற்காகவும் போட்டியிட்டுக்கொண்டு அணுவாயுதங்களை தயாரிப்பது வழக்கமான ஒன்றாக அமைகிறது.
அந்த வரிசையில் அதிகளவான அணுகுண்டுகளை உருவாக்குகின்ற நாடாக சீனா வளர்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதன் படி, இப்போது சீனாவிடம் 500 க்கும் அதிகமான அணுக்குண்டுகள் இருப்பதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கையிருப்பில் அதிக எண்ணிக்கை
2030ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையினை 1,000க்கும் அதிகமாக உயர்த்துவதற்கு சீனா எதிர்பார்ப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
ஆனால், இந்த எண்ணிக்கை அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் வைத்திருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கையினை விட குறைந்த எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
இப்போது கையிருப்பில் ரஷ்யாதான் ஆக அதிக எண்ணிக்கையான அணுக்குண்டுகளை வைத்திருக்கிறது என்றும் சுமார் 4,500 எண்ணிக்கையான அணுக்குண்டுகள் இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
அடுத்து 2 ஆவது இடத்தினை அமெரிக்கா பிடித்துள்ளது, சுமார் 3,700 எண்ணிக்கையான அணுக்குண்டுகளை வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்டொக்ஹோல்ம் (Stockholm) எனப்படும் அனைத்துலக அமைதி ஆய்வு நிலையத்தை மேற்கோள்காட்டியே அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.