தொற்றியது ஒமைக்ரோன் -சீன நகரில் விதிக்கப்பட்டது ஊரடங்கு
ஒமைக்ரோன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சீனாவில் உள்ள பெய்ஸ் நகரில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பெய்ஸ் நகரில் கடந்த சனிக்கிழமை முதல் திடீரென தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது. புதியவகை கொரோனாவான ஒமைக்ரோன் தாக்கத்தால் அங்கு தொற்று அதிகரித்து வருவதாக தெரிகிறது.
14 இலட்சம் பேர் வசிக்கும் பெய்ஸ் நகரில் நேற்றைய நிலவரப்படி 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேருக்கு ஒமைக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நகரில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு அத்தியாவசிமற்ற அனைத்து கடைகளையும் மூடவும், வீதிகளில் வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
