தனது கொள்கைகளை மாற்ற வேண்டும் - சீனாவிடம் ஐ.எம்.எப் பணிப்பாளர் கோரிக்கை
Sri Lanka
IMF Sri Lanka
China
By Dharu
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாத சூழ்நிலை காணப்படுவதால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
குறித்த தகவலை சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா நேற்று (05) தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவூதி அரேபியா, இந்தியா போன்ற புதிய கடன் வழங்குநர்களையும், அதேபோன்று தனியார் துறையினரையும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள imf கூட்டத்தில் பங்கேற்க வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டினா ஜோர்ஜீவா
மேலும், இந்தியாவில் பெப்ரவரி பிற்பகுதியில் கடன் வழங்குநர்கள் மற்றும் சில கடன் வாங்கும் நாடுகளுடன் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.