அதிகரிக்கும் வர்த்தக போர் :ட்ரம்பின் மிரட்டலுக்கு அடிபணிய மறுக்கும் சீனா
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்(donald trump) வரி விதிப்பு தொடர்பான மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என சீனா(china) உறுதிபட தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன அரசின் வர்த்தகத்துறை செயலாளர் ஹே யோங்கியான் தெரிவிக்கையில்,
அமெரிக்கா உடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை. அதேநேரத்தில் அந்நாட்டின் நெருக்கடிக்கு அடி பணிய மாட்டோம். சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
மிரட்டலால் அடிபணிய வைக்க முடியாது
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விரும்பினால், அதற்கு சீனா தயாராக உள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை பரஸ்பரம் சமத்துவம் மற்றும் மரியாதை அடிப்படையில் இருக்க வேண்டும்.ஆனால், மிரட்டல், நெருக்கடி மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் மூலம் சீனாவை கையாள்வது சரியான முடிவு கிடையாது.
வர்த்தக போரில் யாரும் வெற்றி பெறப்போவது இல்லை. அமெரிக்கா தனது சொந்தப் பாதையில் பயணிக்க முடிவு செய்தால், சீனாவும் கடைசி வரை போராடும். என தெரிவித்துள்ளார்.
இதேவேளை வியாழன் முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 84% வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்ததற்கு பதிலடியாக, புதன்கிழமை (ஏப்ரல் 9) தொடங்கிய 104% வீதத்திலிருந்து சீன இறக்குமதிகள் மீதான வரியை ட்ரம்ப் 125% ஆக உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
