சீனாவை உலுக்கிய விமான விபத்து!! திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது

China Plane Crash
By Vanan May 18, 2022 11:47 PM GMT
Report

சீனாவில் அண்மையில் நடந்த விமான விபத்து, விமானி ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து கடந்த மார்ச் 21ஆம் திகதி புறப்பட்டு குவாங்சோ நோக்கிச் சென்றது.

இந்த நிலையில், மதியம் 1.30 மணிக்கு குவாங்ஸி பிராந்தியத்தில் உள்ள ஊசோவ் நகருக்கு மேலே பறந்த போது, திடீரென அந்த விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஊசோவ் நகரின் டெங்க் என்ற கிராமப் பகுதியில் இருக்கும் மலைப்பிரதேசத்தில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவை உலுக்கிய விமான விபத்து!! திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது | China Plane Crash 133 Death Boeing 737 800

மேலும், விமானம் மோதி வெடித்ததில் அங்கிருக்கும் வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விமான விபத்துக் குறித்து காவல்துறையினரும், விமான நிபுணர்களும் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்களும் அங்கு சென்று, விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சீனாவை உலுக்கிய விமான விபத்து!! திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது | China Plane Crash 133 Death Boeing 737 800

ஆய்வு முடிவில் குறித்த விபத்து, வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

"விமானம் 29,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது அது தனது பாதையில் இருந்து சற்று விலகியிருக்கிறது. இதனை கவனித்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு விமானிகள் அறையில் இருந்து எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், விமானிகள் அறையில் உள்ள தொலைபேசிக் கருவிகள் செயற்பாட்டில்தான் இருந்திருக்கின்றன.

சீனாவை உலுக்கிய விமான விபத்து!! திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது | China Plane Crash 133 Death Boeing 737 800

அதுமட்டுமல்லாமல், விமான இயந்திரத்திலும் எந்தக் கோளாறும் இல்லை. இதனால், விமானிகளில் ஒருவர் தான் வேண்டுமென்றே இந்த விபத்தை நிகழ்த்தியிருக்கலாம் எனக் கருத வேண்டியுள்ளது" என்றனர்.

இதுதொடர்பாக ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,

"குறிப்பிட்ட விமானத்தை இயக்கிய விமானிகள் இருவரும் நல்ல மனநலம் மற்றும் உடல் நலத்துடன் தான் இருந்தனர். அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் எந்தப் பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக உடனடியாக எம்மால் முடிவுக்கு வர முடியாது. தொடர்ந்தும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025