பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே காட்சியளித்த நயினை நாகபூசணி அம்மன்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா இன்றைய தினம் (28) மிக சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்ற நிலையில் நேற்று (27) இரவு சப்பறத் திருவிழாவும் இன்று தேர்த்திருவிழாவும் இடம்பெற்றது.
இன்று காலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, பிள்ளையார், முருகன் சமேதரராய் உள் வீதி உலா வந்த நாகபூசணி அம்மன், காலை 08.30 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
தேர்த்திருவிழா
இன்றைய தேர்த்திருவிழாவின் போது பக்தர்கள் காவடி எடுத்து, தீச்சட்டி ஏந்தி, அங்க பிரதட்சணை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள்.

நாளைய தினம் (30) திங்கட்கிழமை காலை தீர்த்த திருவிழா நடைபெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
இதேவேளை மகோற்சவ திருவிழாவின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தரவுள்ளமையால் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் அதிகாலை 05 மணி முதல் இரவு 10 மணி வரையில் படகு சேவைகள் இடம்பெறும் என மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.
மகோற்சவ காலத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு தேவையான காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுக்கான சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு சாரணர்கள், சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியினர் உள்ளிட்டவர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்