ஐ.நா. சபையில் புகார் அளித்துள்ள சீனா!
China
UN Council
Satellites
Elon musk
Space X
By MKkamshan
ஐ.நா. சபையில் சீனா எலன் மஸ்க்கின் (Elon musk) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கள் விண்வெளி நிலையம் மீது எலன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் இரு முறை நெருங்கியது என சீனா தெரிவித்துள்ளது.
உலகின் பிரபல பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் தனது நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளார்.
அந்த செயற்கைக்கோள்களில் சில கடந்த யூலை1 மற்றும் ஒக்டோபர் 21 ஆகிய திகதிகளில் தங்கள் நாட்டு விண்வெளி நிலையத்திற்கு மிக அருகே மோதுவது போல் வந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
செயற்கைக்கோள்கள் மோதுவது போல் வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக சீன விண்வெளி நிலையம் தடுப்பு மோதல் தவிர்ப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றியது என சீனா தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி