இலங்கைக்கு முன்னுரிமையளிக்கும் சீனா- விரைவில் மருத்துவ உதவிகள்!
corona
china
sri Lanka
medicin
By Kalaimathy
இலங்கைக்கு ஒக்ஸிஜன் மற்றும் செயற்கை சுவாச இயந்திரங்களை வழங்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சீனா இலங்கைக்கு ஒக்சிஜன் சிலிண்டர் மற்றும் செயற்கை சுவாச கருவிகளை வழங்கவுள்ளது எனவும் தகவலி் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன தூதுவரிடம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாகவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய விரைவில் இலங்கைக்கு ஒக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்