இலங்கை தொடர்பில் சீனாவின் மௌனம்
srilanka
china
politicial crisis
By Jaso
சீனா, இலங்கையின் நண்பன் என்றாலும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தலையிடத் தயங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் 2.5 பில்லியன் டொலர் கடனுதவிக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை.
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு,அமைய இலங்கையில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.
பொருளாதார நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு கடன் இராஜதந்திரத்தை சீனா பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய போதிலும், அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.