பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை - வெளியான தகவல்
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை துணிகள் அனைத்தையும் மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சீருடைகளை வழங்குவதற்கான ஒப்பந்தச் சான்றிதழ்களை பரிமாறிக் கொள்ளும் அதிகாரப்பூர்வ விழா நேற்று (11) பத்தரமுல்லை - பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீருடை துணியை நன்கொடை
அவர் மேலும் உரையாற்றுகையில், ”2025 ஆம் ஆண்டுக்காக சீனா இலங்கைக்கு ரூ.5.17 பில்லியன் மதிப்பிலான 11.82 மில்லியன் மீற்றர் சீருடை துணியை நன்கொடையாக வழங்கி, 4.6 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயனளித்துள்ளது.
அந்தவகையில், 2026 ஆம் ஆண்டுக்கும் இதே போன்ற பங்களிப்பை வழங்கும் சீனாவின் உறுதி, இரு நாடுகளின் நட்பை மேலும் வலுப்படுத்தும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற பாடசாலைகளைச் சேர்ந்த 44 இலட்சத்து 18 அயிரத்து 404 மாணவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கான ஒப்பந்தச் சான்றிதழ்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான சான்றிதழ்கள் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் சீனத் தூதுவர் கி ஸென்ஹோங் ஆகியோரிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
