சஷீந்திர ராஜபக்சவிற்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை (Shasheendra Rajapaksa) தொடர்ந்தும் விளக்கமறியலில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகநபர் இன்று (12) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் (CIABOC) மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
மகாவலிக்கு சொந்தமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தீ வைத்து அழித்ததற்காக சட்டவிரோதமாக 8,850,000 ரூபாய் பணத்தை இழப்பீடாக பெற்ற ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சஷீந்திர ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 06ஆம் திகதி வைது செய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ச எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
