அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகள் : அமைச்சர் அறிவிப்பு
35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna) தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் மாகாண சபைகள் குறிப்பிடத்தக்க பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆட்சேர்ப்பு முயற்சிகள்
அவற்றில் அதிகபட்சமாக 16,651 வெற்றிடங்கள் மேல் மாகாண சபையில் நிலவுவதாக குறிப்பிட்ட அவர் இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடந்து வருவதாக உறுதிப்படுத்தினார்.
நாடு தழுவிய சேவைகளுக்கு 1,000 பல்கலைக்கழக பட்டதாரிகள் ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,000 பேரை பணியமர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச துறையை வலுப்படுத்தும் ஒரு பரந்த நடவடிக்கையாக, 35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
