U.S-U.K-AUS வரலாற்று ஒப்பந்தம்! “தலைக்கு மேல் தொங்கும் வாள் போன்றது” சீனத் தூதுவர் அறிக்கை
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து சமீபத்தில் செய்துகொண்ட “AUKUS” ஒப்பந்தம் குறித்து இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong கவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஒப்பந்தம் அவுஸ்திரேலியாவுக்கு குறைந்தது எட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் பசிபிக்-இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளுக்கு டாமோக்கிள்ஸின் வாளைப் பிடிப்பதைப் போன்றது.
"Damocles-இன் வாள்" என்பது, குதிரையின் முடியில் கட்டி தலைக்கு மேல் தொங்கவிடப்பட்டு இருக்கும் வாள் ஆகும்.
இது எந்த நேரத்தில் தலையில் விழும் என்ற ஆபத்தை குறிக்கும்.
“Damocles” கிரேக்க கதையில் தோன்றும் பாத்திரமாகும், இது அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் உடனடி மற்றும் எப்போதும் இருக்கும் ஆபத்தை குறிக்கிறது.
மேலும் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Qi Zhenhong,
AUKUS ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் பரவுவதற்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. இந்த ஒப்பந்தம் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று தூதர் கூறினார்.
இது ஒரு புதிய ஆயுதப் போட்டியை உருவாக்குகிறது, இது பிராந்திய செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் பிரிட்டனும் ஈரான் மற்றும் வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கவில்லை, அதே நேரத்தில் இஸ்ரேலின் அணு ஆயுத மேம்பாட்டைப் புறக்கணித்து ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குகின்றன.
இதன்மூலம் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் இரட்டை முகம் தெரிவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என சீனா நம்புவதாக தூதர் கூறினார்.
இருப்பினும், சீனா எப்போதும் தனது அணுசக்தியை மிகக் குறைந்த மட்டத்தில் பராமரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.