கட்டுநாயக்க விமான நிலைத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட் பொதிகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கைது கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (11.04.2026) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து ரூ. 3.915 மில்லியன் மதிப்புள்ள சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிகரெட் பொதிகள் பறிமுதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய சீன தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று காலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவர் கொண்டு வந்த இரண்டு பயண பொதியில் மறைத்து வைத்திருந்த 26,100 சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்படி சிகரெட் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சந்தேக நபருக்கு ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |