சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா

Hambantota United States of America India China Ship In Sri Lanka Yuan Wang 5
By Kiruththikan Aug 19, 2022 06:03 AM GMT
Report

இந்தியா தயார்

சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது என இந்தியாவின் முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை கண்காணிக்கவே சீனாவின் உளவு கப்பல் இலங்கையின் தென் பகுதியில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளதாகவும் இந்த கப்பலை எதிர்கொள்ள இந்தியாவும் முழு தகுதியுடன் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கேற்றால் போல் இந்தியாவின் கரையோரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமையும் உலங்குவானுர்த்திகள், கடற்படை என்பன அதியுச்ச பாதுகாப்பில் ஈடுபடுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும், சிறிலங்காவிற்கு இந்தியா அளித்த உளவு விமானமும் இந்தியப் பாதுகாப்பின் ஒரு பகுதியாகவே நோக்கப்படுகின்றது.

வான்வெளி யுத்தம் -  மின்னணு யுத்தம்

சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா | Chinese Spy Ship Yuan Wang 5 India Warning China

நவீன உலகில் வான்வெளி யுத்தம் அதிகமாகி உள்ளது. அதேபோல, 'சைபர் தாக்குதல் ' மற்றும் மின்னணு கருவிகளால் தொடுக்கப்படும் யுத்தம் என்பனவும் அதிகரித்துள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் எதையும் எதிர்கொள்ளும் அளவுக்கு, 'யுவான் வாங் 5' கப்பலில் நவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளதால், கடற்படையின் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.

வல்லரசு நாடான சீனா, 'பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி' என்ற கடற்படையை அமைத்துள்ளது. ' அதில் ஸ்ட்ரேட்டஜிக் சப்போர்ட் போர்ஸ்' என்ற ஒரு பிரிவு உண்டு ஏராளமான போர் கப்பல்கள் உள்ளன. அவற்றில் மிக நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது தான், 'யுவான் வாங்- 5' ரக கப்பல்.

உளவு பணிக்காக உருவான இந்த கப்பல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. அத்துடன் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் திறன் படைத்தது.

இது, சீனாவின் மூன்றாவது தலைமுறை கண்டுபிடிப்பாக கொண்டாடப்படுகிறது.

யுவான் வாங் 5 - ஐ.என்.எஸ். துருவ்

சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா | Chinese Spy Ship Yuan Wang 5 India Warning China

சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பலை போன்று இந்தியாவிடம், 'ஐ.என்.எஸ்., துருவ்' எனும் மிகப்பெரிய உளவுக்கப்பல் உள்ளது.

இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும் திறனை இக் கப்பல் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 'யுவான் வாங் 5' கப்பல், சீன தலைநகர் பீஜிங்கில் இருக்கும் தலைமை கடற்படை மையத்துக்கு, தான் சேகரிக்கும் அனைத்து உளவு தகவல்களையும் உடனுக்குடன் அனுப்பி வைக்கும்.

மேலும், 750 கி.மீ., சுற்றளவில் உள்ள எந்த பொருளையும் துல்லியமாக படம் பிடிக்கும் வல்லமை கொண்டது எனவும் தெரிவிக்கபடுகின்றது.

'யுவான் வாங் 5' கப்பலில் இருந்து 'லான் மார்ச் -5' என்ற ஏவுகணையை ஏவ முடியும் எனவும் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் சீனாவின் யுவான் வாங் 5 கப்பலின் அத்தனை சிறப்பம்சங்களையும் இந்தியாவின் துருவ் கப்பல் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் எனவும் மேற்குலக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா

சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா | Chinese Spy Ship Yuan Wang 5 India Warning China

இதற்கிடையில் நேற்று, அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்குவதாகவும், அமெரிக்க செய்மதிகள் இலங்கையை நோக்கி திருப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியது.

சீனாவின் உளவு கப்பல் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதால் தான் இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ வரை துல்லியமாக ஆய்வு செய்யும் திறன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, இந்தியாவின் அணுமின்நிலையம் உட்பட செய்மதி ஏவுதளமான ஸ்ரீ ஹரிகோட்டா வரை பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, சிறிலங்காவில் கப்பல் நிற்கும் காலப்பகுதில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்பது குறித்து கண்காணிக்க உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்த சாதனங்கள் என்ன என்பதை அமெரிக்கா வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆக இந்திய சீனா மற்றும் அமெரிக்காவின் புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது என்பது வெளிப்படையாகின்றது.

தொடர்புடைய செய்தி 

சிறிலங்காவிற்குள் நுழையும் அமெரிக்க இராணுவ செயற்கைகோள்..! இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா
சீனாவின் உளவுக்கப்பலுக்கு சவால் விடும் இந்தியாவின் துருவ் கப்பல்..!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024