ஹோர்முஸ் அருகே உள்ள ஈரானிய தளங்கள் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது.
இதில் 5,000 பவுண்ட் (சுமார் 2,268 கிலோகிராம்) எடை கொண்ட 'டீப் பெனெட்ரேட்டர்' மற்றும் 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
Hours ago, U.S. forces successfully employed multiple 5,000-pound deep penetrator munitions on hardened Iranian missile sites along Iran’s coastline near the Strait of Hormuz. The Iranian anti-ship cruise missiles in these sites posed a risk to international shipping in the… pic.twitter.com/hgCSFH0cqO
— U.S. Central Command (@CENTCOM) March 17, 2026
CENTCOM அறிக்கை
CENTCOM தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிட்ட அறிக்கையில்,

"சில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கப் படைகள் ஈரானின் கடற்கரைப் பகுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள கடினமாக்கப்பட்ட ஈரானிய மிசைல் தளங்களுக்கு பல 5,000 பவுண்ட் டீப் பெனெட்ரேட்டர் முனிஷன்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தின.
இந்தத் தளங்களில் உள்ள ஈரானிய ஆண்டி-ஷிப் க்ரூஸ் மிசைல்கள் (கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள்) சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஹோர்முஸ் நீரிணை
இந்தத் தாக்குதல், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் (அல்லது பெருமளவு தடுத்ததால்) ஏற்பட்டுள்ள சர்வதேச அச்சுறுத்தலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான இந்த நீரிணை வழியாக தினசரி சுமார் 20% உலக எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது.
ஈரானின் இந்தத் தடுப்பு நடவடிக்கைகளால் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருகின்றன .இந்த 5,000 பவுண்ட் குண்டுகள் (GBU-72 போன்றவை) நிலத்தடி அல்லது கான்கிரீட் கொண்டு வலுப்படுத்தப்பட்ட தளங்களை அழிக்க வடிவமைக்கப்பட்டவை என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |