குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் அதிரடி கைது!
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் நேற்று (17) குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
இவ்வாறு கைது செயய்ப்பட்ட அதிகார கம்பஹா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும், இந்த மோசடியின் பின்னணி குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |