வங்கி வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து மோசடி! தொடங்கியது சிஐடி விசாரணை
காவல்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு குழு குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை தொடங்கியுள்ளது.
தொடர்ந்து கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில், சிஐடியின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணை
இவங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் பிற நிபுணர்கள் உட்பட இலக்கு வைக்கப்பட்ட நபர்களைத் தொடர்பு கொள்ள சந்தேக நபர்கள் இலங்கையின் லேண்ட்லைன் எண்களை ஒத்த வெளிநாட்டு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அழைப்புகளின் போது, மோசடி செய்பவர்கள் உள்ளூர் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை காட்டிக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொய் கூறி தகவல்களை திரட்டி மோசடிகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |