ஷிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக ஆரம்பமாகிறது CID-யின் அடுத்த விசாரணை
அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, பெறப்பட்ட பல மில்லியன் ரூபாய் பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
நாட்டில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, ஷிராந்தி ராஜபக்சவால் நடத்தப்படுவதாக அறியப்படும் சிரிலிய சவ்வா அமைப்பானது பல மில்லியன் ரூபாயை அறவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
PET ஸ்கேனர் வாங்கும் திட்டத்திற்காக, சிறிலியசவியா அமைப்பு அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகவும், இதற்காக தேசிய சேமிப்பு வங்கி ஒரு மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சட்டமா அதிபர் உத்தரவு
இது தொடர்பாக, அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் கரியவசத்திடம் இருந்து வாக்குமூலம் பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மகாரகம அபேக்ஷா மருத்துவமனை, சீன அரசாங்கத்திடமிருந்து PET ஸ்கேனரை நன்கொடையாகப் பெற்றது.
இந்நிலையில் நன்கொடையாகப் பெறப்பட்ட PET ஸ்கேனரில் பணம் சேர்க்கப்பட்டதன் மூலம் மோசடி நடந்ததா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |