பிள்ளையான் தொடர்பில் சிஐடி நீதிமன்றுக்கு விடுத்த அறிவிப்பு

CID - Sri Lanka Police Sri Lankan Tamils Pillayan Sri Lankan Peoples Law and Order
By Dilakshan Sep 16, 2025 12:04 AM GMT
Report

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களை, கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா முன்னிலையில் முற்படுத்திய போதே சிஐடியினர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். .

அத்துடன், நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள், இந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போதைப்பொருள் கொள்கலன்கள் விவகாரம்! விசாரணைகளுக்கு தயாரென நாமல் சீற்றம்

போதைப்பொருள் கொள்கலன்கள் விவகாரம்! விசாரணைகளுக்கு தயாரென நாமல் சீற்றம்


வாக்குமூல பதிவு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 127 இன் கீழ் நீதவான் முன்னிலையில் இந்த வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் தொடர்பில் சிஐடி நீதிமன்றுக்கு விடுத்த அறிவிப்பு | Cid Pillayan Named As Suspect In Professor

நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நடராசா நகுலேந்திரன் எனப்படும் ‘சிம்பு’, கதிர்காமர் தம்பி ஜெயகீசன் எனப்படும் ‘ஜெயந்தன்’ மற்றும் நிமல் தேவசுகன் எனப்படும் ‘ஜெயகாந்தன்’ ஆகிய மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு நீதினமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்போது, சந்தேகநபர்களான மூவரும் இந்த வாக்குமூலங்களை சுதந்திரமாகவும் எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் வழங்குவதாக தங்கள் சட்டத்தரணி அசோக வீரசூரிய மூலம் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சட்டத்தரணி வீரசூரியவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நீதவான் முடிவு செய்துள்ளார்.

இப்படியான அரசியல்வாதி ஒருபோதும் தலைவராக இருக்க முடியாது! சாடும் மகிந்த

இப்படியான அரசியல்வாதி ஒருபோதும் தலைவராக இருக்க முடியாது! சாடும் மகிந்த


நேரில் கண்ட சாட்சி

மேலும், கல்கிசை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் சந்தேக நபர்களை முற்படுத்திய சிஐடி, கடத்தலை நேரில் கண்ட சாட்சி ஒருவர் இருப்பதாகவும், அவர் சம்பவம் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

பிள்ளையான் தொடர்பில் சிஐடி நீதிமன்றுக்கு விடுத்த அறிவிப்பு | Cid Pillayan Named As Suspect In Professor

நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கடத்தலில் ஈடுபட்டதாக சிஐடி மேலும் நீதிமன்றத்திற்கு கூறியுள்ளது.

சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அசோக வீரசூரிய, சிஐடி சந்தேக நபர்களை தமிழில் விசாரித்ததாகவும், ஆனால் சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலங்களுக்கு அவர்களின் கையொப்பங்களைப் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்காரணமாக சந்தேக நபர்களுக்கு தாங்கள் கையெழுத்திட்ட வாக்குமூலங்களின் உள்ளடக்கம் குறித்து எதுவும் தெரியாது என்றும், வழக்கு குறித்து தங்களுக்கு என்ன தெரியும் என்பதையும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை புலனாய்வாளர்களிடம் கூறியிருப்பதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உண்மைகளை பரிசீலித்த பின்னர், நீதிபதி மேலதிக விசாரணையை ஒத்திவைத்து, வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார். 

படுக்கையில் இறந்து கிடந்த இளம் குடும்ப பெண்! பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

படுக்கையில் இறந்து கிடந்த இளம் குடும்ப பெண்! பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026