ஒரு நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீட்டுக்கு..! யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
பல்கலைக்கழகங்கள் சமூகத்தின் முன்னோடி என்பதை நிரூபிக்கும் முகமான செயல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நிகழ்தேறியுள்ளது.
ஒரு நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீடு திரும்பத்தக்க வகையிலான சத்திர சிகிச்சை நிலைய ஆரம்ப விழா இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் (CTRB - Clinical Training and Research Block) இடம்பெற்றது.
யாழ் மருத்துவ பீடம், யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பு, உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றோடும், புலம் பெயர் அமைப்புக்களுடைய பங்களிப்போடும் ஒன்றிணைந்த வகையில் குறித்த சத்திர சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
நீண்ட கால காத்திருப்பு
சிறு சிறு சத்திரசிகிச்சைகளுக்கான நீண்ட கால காத்திருப்பு மற்றும் அதீத செலவைக் குறைக்கும் உபாயமாகவும் இது பார்க்கப்படுகிறது.

முற்றிலும் இலவசமாக வழங்கப்பட இருக்கின்ற இச்சேவை எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா வாய்ப்புக்களை வழங்கக் கூடிய தளமாகவும் விரிவு படுத்தப்படலாம் என்கிற நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில், வைத்திய கலாநிதி காருண்யன் அருளாந்ந்தம் (IMHO, USA) யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன்.
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரீ.சத்தியமூர்த்தி, உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள், யாழ் மருத்துவ பீட பேராசிரியர்கள் வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









