காணமலாக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்: கிழக்கு பல்கலையில் நுழைந்த சிஐடியினர்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Eastern University, Sri Lanka) குற்றப் புலனாய்வு பிரிவினரால் மூன்று நாட்கள் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்கள் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைந்த சிஐடியினர்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனை கடந்த எட்டாம் திகதி அவருடைய கட்சி காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் 23,24,25, ஆகிய மூன்று தினங்களாக கொழும்பில் இருந்து வந்த குற்ற புலனாய்வு பிரிவினர் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஒரு சில விரிவுரையாளர்களின் ஆவணங்களை சோதனை செய்துள்ளனர்.
அத்தோடு, இது தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
