ரணிலின் வீட்டுக்கு விரைந்த சிஐடி : மனைவியிடம் வாக்குமூலம் பதிவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் இன்று (24) காலை அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்ரி விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து அவரது சட்டப் பிரதிநிதிகள் அளித்த தகவலின் அடிப்படையில், வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவர் வசிக்கும் இடத்திற்குச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வழக்கு தொடர்பான வாக்குமூலம்
16.6 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பொது நிதியைத் தனது தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இந்த வாக்குமூலம் பெறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |