ஹெக்கர் திருடிய 2.5 Million பணம் - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மகா விகாரை வளாகத்தில் இன்று (24) முற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் மேலும் கூறுகையில், இந்த விடயம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விரிவான விசாரணைகள்
இதில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கான சர்வதேச ஒத்துழைப்புகளும் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில், இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக உள்ளோம் என்றார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் சமாதான நடைப்பயணத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளைச் சந்தித்த பின்னர், பிரதமர் ஹரிணி அமரசூரிய கண்டி மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்ததுடன் அங்கு மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்ருவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து பிரதமர் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |