கொழும்பில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்ட முக்கிய அரச நிறுவனம்
Covid-19
Colombo
Dehiwala
By Vasanth
கொழும்பு – தெஹிவளை தபால் நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து குறித்த தபால் நிலையம் உடனடியாகவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கரந்தெனிய பிரதேசத்தில் இருந்து வருகைதரும் குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு தொற்று இருப்பது இன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்காலிகமாக தபால்நிலையம் மூடப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி