சிறிலங்காவில் இழுத்து மூடப்படும் 2 அரச திணைக்களங்கள்
Sri Lanka Government Gazette
By Vanan
இரண்டு அரச திணைக்களங்களை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம்
அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறை திணைக்களம்
மேலும், கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு 1990 பெப்ரவாி 6ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறை திணைக்களமும் கலைக்கப்பட்டுள்ளது.


