மன வேதனையில் கருணா பிள்ளையானின் சகாக்கள்! புலம்புகிறார் விமல்
விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் இருக்கும் முன்னாள் போராளிகள் மன வேதனையுடன் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இராணுவ புலனாய்வு துறை
விநாயக மூர்த்திமுரளிதரன் மற்றும் பிள்ளையானின் ஆட்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இவை ஊடகங்களில் வெளிவருதில்லை. விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய குழுக்கள் கிழக்கில் கடத்தல், துன்புறுத்தல்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு காவல்துறையினர் கைவைப்பதில்லை. புலனாய்வு பிரிவினரும் இது தொடர்பில் தேடுவதில்லை.
இந்த பின்னணியில் இராணுவ புலனாய்வு துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அதன்படி இராணுவ புலனாய்வு துறைக்கு 60 வீதம் பணியாட்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. அதனால் யாரும் புதிதாக சேர்வதில்லை.
இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் புலம்பெயர்ந்தோரின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்படுகின்றது. அவர்கள் இதற்கு பணம் வழங்குகின்றனர்” என கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா
